ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரைபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (71). விவசாயம் செய்து வருகிறார். இவர் வழக்கமாக அவரது அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்தே செல்வார்.வழக்கமாக வேலை முடித்து வீடு திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் கண்ணன் மீது வேகமாக மோதியது.

இதனால் பலத்த காயமடைந்த கண்ணனை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.