வேலூர்: காட்பாடி ரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத ஜோடிகளின் உடல் ரயிலில் அடிப்பட்டு பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகில் பழைய காட்பாடியில் ரயில் தண்டவாளத்தில் சென்னையிலிருந்து திருவேந்திரம் செல்லும் ரயிலில் அடிப்பட்டு 27 வயது மதிக்கத் தக்க இஸ்லாமிய பெண் மற்றும் 30 வயது மதிக்கத் தக்க ஒரு ஆண் ஆகியோர் கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்து உடலைக் காட்பாடி ரயில்வே போலீசார் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இருவரும் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இவர்கள் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அபிபூர் ரகுமான்(35) இவர் திருமணமாகாதவர், ஷபானயாஸ்மீன் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானவர்கள் இவர்கள் இருவருக்கு கள்ளக்காதல் எனக் கூறப்படுகிறது. இவர்கள் இங்கு வந்த தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.